ஒரே குரூப் தானா? 6 திருமணம் செய்து மோசடி! அதிகாலையில் எஸ்கேப்பான சந்தியா! இதான் இவங்களுக்கு வேலையே!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே, ஆறு திருமணம் செய்து பல நபர்களை ஏமாற்றியது ஏழாவது திருமணத்திற்கு தயாரான மணப்பெண் உள்பட 4 பேர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பரபர பின்னணி குறித்து பார்க்கலாம்!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் இவருக்கும் மதுரை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த ஏழாம் தேதி புது வெங்கரை அம்மன் ஆலயத்தில் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் பெண் வீட்டாரராக பெண்ணோட அக்கா மாமா என இருவர் மட்டுமே வந்திருந்தனர். மேலும் மதுரை சார்ந்த பாலமுருகன் என்ற புரோக்கர். இவர்கள் மூவரும் மட்டுமே வந்திருந்து திருமணத்தை முடித்துவிட்டு திருமணத்தொகை கமிஷனாக ஒன்றரை லட்சம் வாங்கிக் கொண்டு சென்று விட்டனர்.

மாயமான மணமகள்
புது வாழ்க்கை தொடங்கிய தம்பதிகள் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடங்கினர். நீண்ட கனவுடன் சென்ற புது மாப்பிள்ளை தனபாலுக்கு ஒன்பதாம் தேதி காலை எழுந்து பார்த்தவுடன் தனது மனைவியை காணவில்லை என தேடி பார்த்தார். பல இடங்களில் தேசி எங்கும் கிடைக்கவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்த்தபோது புரோக்கர்கள் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களாக வந்த அனைவரும் செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

நகை பணத்துடன் எஸ்கேப்
உடனடியாக பீரோவில் பார்த்தபோது கல்யாண பட்டு புடவை அந்த கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணவில்லை என்பது தெரியவந்தது. அப்பொழுதுதான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடிய போது வேற ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது.

6 திருமணம்
உடனடியாக உஷாரான நபர்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் போல் மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி புரோக்கரிடம் பேசி உள்ளனர். மணமகனின் போட்டோ புரோக்கரிடம் கொடுத்துள்ளனர் அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து உள்ளது என பேசி போன் மூலமே முடிவு செய்துள்ளனர். நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து விடியற்காலை ஆறு மணிக்கு சந்தியா தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்துள்ளனர்.

அதிர்ச்சி தகவல்
அப்போது அங்கு வந்த சந்தியா வசமாக சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மூவரையும் தனபால் உறவினர்கள் பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மதுரை சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் நடந்துள்ளதாகவும் இது ஏழாவதாக திருமணம் நடக்க இருந்த போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு எஸ்கேப் ஆகி விடுவது வழக்கம். மதுரை சேர்ந்த புரோக்கர்கள் மூலம் இதுபோல் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது என்கின்றனர் போலீசார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications