சூடுபிடிக்கும் கொடநாடு எஸ்டேட் வழக்கு.. ஜெயலலிதா, சசிகலா அறையில் சிபிசிஐடி ஆய்வு.. பின்னணி என்ன?
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு அங்கு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீஸார் சயான், வாளையார் மனோஜ், சதீசன், தீபு, சந்தோஷ் சாமி, பிஜின், மனோஜ் சாமி, ஜித்தன் ஜாய், உதயகுமார், சதீஷ், ஜம்சீர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சூடுபிடித்த வழக்கு
திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த வழக்கிற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மறுவிசாரணையில் 316 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இவை அறிக்கையாகவும் நீலகிரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆதாரங்கள்
ஆனாலும் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை. இதனால் இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீஸார் 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

சிபிசிஐடி
இதன் ஒரு நகல் சிபிசிஐடி போலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான போலீஸார் நேற்றைய தினம் கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. கொலையாளிகள் திட்டமிட்டு பங்களாவுக்கு நுழைந்த நுழைவாயில் பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஜெயலலிதா அறையில் ஆய்வு
இந்த ஆய்வின் போது முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக கூறப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை சசிகலாவின் அறைகளில் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார் அந்த பகுதிகளை புகைப்படங்களால் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணை இன்றும் தொடரும் என தெரிகிறது. நாளை கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications