மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள்
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக இடையிலான கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கான 5 முக்கிய காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்த பிரிவு உபசார விழாவின்போது அளித்த விருந்தையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார்.
அதேபோல் அமித்ஷா நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்திலும் நிதீஷ் குமார் பங்கேற்காமல் அமைச்சரையே அனுப்பி வைத்தார். ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை கூட்டணி கட்சியை சேர்ந்த முதலமைச்சரே புறக்கணித்து இருப்பதற்கு விரிசலே காரணம் என்று கூறப்பட்டது. இதற்கான 5 முக்கிய காரணங்கள் இதோ...

1. பீகார் சபாநாயகர்
பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா என்பவர் பதவி வகித்து வருகிறார். இவருக்கும் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராகவே சபாநாயகர் கேள்வி எழுப்பி அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை நீக்க வேண்டும் என நிதீஷ் குமார் பாஜகவை வலியுறுத்தினார்.

2. அமைச்சரவையில் இடம்
மத்தியில் ஆளும் பாஜக அரசிலும் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரே ஒரு மத்திய அமைச்சரவை பொறுப்பை மட்டுமே பாஜக வழங்கியதால் நிதீஷ் குமார் அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து அவர் வெளிப்படையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலடி தரும் வகையில் பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு 9ல் ஒரு இடத்தை மட்டுமே ஜேடியு வழங்கியது.

3. ஒரே நாடு ஒரே தேர்தல்
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் எதிர்த்து வருகிறார். ஆனால், மத்திய அரசும் பாரதிய ஜனதா கட்சியும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இதன் காரணமாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

4. அமித்ஷா VS நிதீஷ் குமார்
பீகார் அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் தன்னுடைய தலையீடும் இருக்க வேண்டும் என நிதீஷ் குமார் விரும்பியதாக கூறப்படுகிறது. இது பீகாரில் தனது ஆதிக்கத்தை குறைப்பதைபோல் இருப்பதாக அமித்ஷா கருதியதாக தெரிகிறது. இதன் காரணமாக நிதீஷ் குமார் ஆட்சியில் பல ஆண்டுகளாக துணை முதலமைச்சராக இருந்த பாஜகவின் சுஷில் மோடியை பீகார் அரசியலிலிருந்து கட்சி தலைமை வெளியேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5. ஆர்.சி.பி. சிங்
மத்திய அமைச்சரவையில் ஜேடியு அங்கம் வகிக்காது என நிதீஷ் தெரிவித்த நிலையில், அதை மீறி பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக இருந்த ஆர்.சி.பி. சிங்கிற்கு கட்சித் தலைமையிடம் கருத்து கேட்காமல் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது பாஜக. இது நிதீஷ் குமாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆர்.சி.பி. சிங்கிற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்க நிதீஷ் மறுத்ததால் அவரால் மத்திய அமைச்சராக நீடிக்க முடியவில்லை.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications