பீகார்: பாஜக, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் போராட்டம்.. சபாநாயகர் ராஜினாமா.. பரபரத்த பாட்னா!
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் சட்டசபை முன்பாக பாஜக, இடதுசாரி கட்சிகளின் எம்.எல்.ஏக்களின் போட்டி போட்டு போராட்டம் நடத்தினர்; ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தும் அதை நிராகரித்து சட்டசபையில் சபாநாயகர் பதவியை முதலில் பாஜகவின் விஜய்குமார் ராஜினாமா செய்ய மறுத்தார்; பின்னர் பதவியை ராஜினாமா செய்தார்.. இத்தகைய நிகழ்வுகளால் இன்று பாட்னா சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.
பீகாரில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பதவியேற்றார். பின்னர் அனைத்து கூட்டணிகளையும் அரவணைக்கும் விதமாக அமைச்சரவை அமைக்கப்பட்டு பதவியேற்பும் நடைபெற்றது. அப்போது ஜேடியூவின் சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சபாநாயகர் பதவியில் இருந்தவர் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா. ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்தவர் விஜய்குமார் சின்ஹா என்கிற வி.கே.சின்ஹா. ஜேடியூ, பாஜக கூட்டணி பிளவுக்கும் கூட காரணமே இவர்தான் எனவும் கூறப்பட்டது. இதனால் விஜய்குமார் சின்ஹா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள்.
இந்த நிலையில் இன்று சட்டசபை காலை கூடியது. அதற்கு முன்னதாக திடீரென ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இட்ங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டசபைக்கு வந்த இடதுசாரி எம்.எல்.ஏக்கள் இந்த ரெய்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போட்டியாக பாஜக எம்.எல்.ஏக்களும் சட்டசபை வளாகத்தில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இது தொடர்பான அத்தனைக்கும் சட்டசபையில் பதிலளிப்போம் என ஒற்றை வரியில் பதில் சொன்னார் தேஜஸ்வி யாதவ். அதேபோல், நிதிஷ்குமார் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது; பாஜகவால் எங்களை மிரட்ட முடியாது என சவால்விட்டார் ராப்ரி தேவி.
இதன்பின்னர் சட்டசபை கூடிய போது, சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா, தமக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மாத்தை நிராகரிப்பதாக அறிவிக்க பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா தமது பதவியை ராஜினாமா செய்தார். ஒருவேளை விஜய்குமார் சின்ஹா தமது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து அடம்பிடித்து இருந்தால் அரசியல் குழப்பமும் அரசியல் சாசன சிக்கலும் எழுந்திருக்கும்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications