எலுமிச்சை பறித்ததால் கோபம்.. மருமகளை அடித்துக் கொன்ற மாமியார்.. பீகாரில் கொடூரம்!
தோட்டத்தில் எலுமிச்சைப் பழத்தைப் பறித்ததற்காக மருமகளை மாமியாரும், நாத்தனார்களும் சேர்ந்து அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.
பாட்னா: பீகாரில் தோட்டத்தில் எலுமிச்சைப் பழத்தைப் பறித்ததற்காக மருமகளை மாமியாரும், நாத்தனார்களும் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு சீசனிலும் சில காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வது வழக்கம்தான். அந்தவகையில் இந்தாண்டு இந்தியா முழுவதும் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த விலைக்கு ஒரு கிலோ 500 வரையிலும், ஒரு பழத்தின் விலை 10 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெயில் காலத்தில் ஜூஸ் போடுவதற்கு அதிகம் பயன்படும் எலுமிச்சையின் இந்த திடீர் விலையுயர்வு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எலுமிச்சை சாகுபடி செய்தவர்கள் தங்கத்தைப் போல் அதற்கு காவல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் எலுமிச்சை பழத்திற்காக ஒரு கொலை நடந்திருப்பது பீகாரில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

எலுமிச்சையால் பிரச்சினை
பிகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள செயின்பூர் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த காஜல்தேவி, நேற்று தோட்டத்தில் இருந்து எலுமிச்சை பழத்தைப் பறித்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கழுத்தை நெரித்து கொலை
அப்போது, நாத்தனார்கள் இருவரும் சேர்ந்து காஜல் தேவியுடன் சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி காஜலை அவரது மாமியாரும், நாத்தனார்களும் சேர்ந்து அடித்துள்ளனர். அப்போதும் கோபம் தீராமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவாளிகள் தலைமறைவு
காஜலைக் கொலை செய்ததும் பயத்தில் மாமியாரும், நாத்தனார்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காஜலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
காஜலின் கணவர் மற்றும் மாமனார் வெளி மாநிலங்களில் பணிபுரிவதாகவும், சம்பவத்தின் போது அவர்கள் வீட்டில் இல்லை என்றும், முதற்கட்ட விசாரணையில் எலுமிச்சைப் பழத்திற்காகத்தான் கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காஜல் எலுமிச்சம்பழத்தை திருட முயற்சித்தாரா அல்லது பழங்களை கேட்காமல் பறித்ததால் சண்டை நடந்ததா? என்பது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications