என்னாச்சு... ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியை திடீரென உதறிய நிதிஷ்குமார்... புதிய தலைவர் தேர்வு!
பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகி உள்ளார். நிதிஷ்குமாருக்கு நெருக்கமான, கட்சியின் பொது செயலாளராக இருந்த ஆர்.சி..பி சிங் புதிய தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
கடந்த 2019-ல் நிதிஷ்குமார் ஜேடியு தலைவராக 3 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் ஆர்.சி.பி சிங்குக்காக இந்த பதவியில் இருந்து விலகி உள்ளார்.

பிகாரில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றி பாஜகவுக்கு 74 இடங்கள் கிடைத்தது அக்கட்சிக்கு கடும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் ஜேடியுவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 43 இடங்களில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலை விட அந்த கட்சி பல இடங்களில் தோல்வியை தழுவியது.
கூட்டணி கட்சியினர் ஏற்கனவே ஒப்பு கொண்டபடி நிதிஷ்குமார் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஜேடியு கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஜேடியு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். மாநிலங்களவை எம்.பி.யும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்த ராமச்சந்திரா பிரசாத் சிங் (ஆர்.சி.பி சிங்) புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். ஜேடியு புதிய தலைவராக தேர்வு செய்யபப்ட்டுள்ள ஆர்.சி.பி சிங் முதல்வர் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.பி சிங் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு நிதிஷ்குமார் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது அவருடன் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். 2005-ல் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றபோது ஆர்.சி.பி சிங் முதன்மை செயலாளரானார். கடந்த 2019-ல் நிதிஷ்குமார் ஜேடியு தலைவராக 3 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் ஆர்.சி.பி சிங்குக்காக இந்த பதவியில் இருந்து விலகியுளளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications