அவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்.. மகா பாவிகள்! - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொதிப்பு
பாட்னா: தேசந்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கையை மீறி மது அருந்துபவர்கள் இந்தியர்களே இல்லை என்றும், அத்தகையவர்கள் மிகப்பெரும் பாவிகள் எனவும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார், கடந்த முறை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்தினார்.
இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் குடிமகன்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தடையின்றி நடைபெறும் கள்ளச்சார வியாபாரம்
பீகாரில் அரசு மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கள்ளச்சார விற்பனை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி பீகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 12 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓராண்டில் கள்ளச் சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டோர் பலி
கடந்த ஓராண்டில் மட்டும் அங்கு கள்ளச் சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகள் பீகாரில் நிதிஷ் குமார் அரசு மதுவிலக்கு தவறான முறையில் அறிமுகம் செய்ததாலேயே அங்கு கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.

மது அருந்தி கைதானவர்களை விடுவிக்க கோரிக்கை
இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை கவுன்சில் கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.சி. சுனில் சிங், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற்று அவர்களை சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மது அருந்துபவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்
இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "மது அருந்துபவர்களை மகா பாவிகள் என்று நான் அழைப்பேன். மகாத்மா காந்தியின் மதுவிலக்குக் கொள்கையை கடைபிடிக்காதவர்கள் இந்தியர்களே இல்லை. அவர்கள் எந்த திறமையும் இல்லாதவர்கள். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்கள் குடும்பத்தினருக்கு அரசு எந்த நிவாரணமோ இழப்பீடோ வழங்காது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளோம்." என்றார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications