நெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு
பாட்னா: பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து காது கொடுத்துக் கேட்காத அதிகாரிகளை தடிகளைக் கொண்டு அடியுங்கள் என பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளவர் கிரிராஜ் சிங். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்துவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரிராஜ் சிங், "அரசு அதிகாரிகள் பெரும்பாலும் தங்கள் புகார்களுக்குக் கொஞ்சம் கூட கவனம் செலுத்துவதில்லை என அடிக்கடி மக்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர்.
நான் அப்போது அவர்களிடம் சொன்னேன், இது போன்ற சிறிய பிரச்சனைகளை தீர்க்க தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், கிராம பிரதிநிதிகள், ஆட்சியர், ஆகியோர் உள்ளனர். மக்களுக்கு பணி செய்வது தான் அவர்கள் கடமை.
அவர்கள் உங்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவில்லை என்றால், மூங்கில் தடியை எடுத்து அவர்களின் மண்டையைப் பிளந்துவிடுங்கள். அப்போதும் அவர்கள் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.
அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சு தற்போது வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிகாரிகளை தாக்குங்கள் என்று அமைச்சர் கூறிய இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications