அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக்
பாட்னா: சமீப நாட்களாக பெங்களூர், சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் 'ஸோம்பி' போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பான வீடியோக்கள் ஷேராகி இருந்தன. இந்நிலையில், தற்போது பீகாரிலும் இந்த வகை போதை பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிஹாரில், பரபரப்பான சாலையில் சுயநினைவின்றி தள்ளாடிய ஒருவரால் ஸோம்பி போதைப்பொருள் பரவல் குறித்த புதிய அச்சம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், அந்த நபர் தன் சுயநினைவை இழந்திருந்ததாக தெரிவித்தனர். ஆணி அடித்ததை போல ஒரே இடத்தில், ஆனால் தடுமாறியவாது இளைஞர் நின்றிருந்தது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
'ஸோம்பி போதைப்பொருள்'
'ஸோம்பி போதைப்பொருள்' என்பது மூளை, உடலை கடுமையாக பாதிக்கும் செயற்கை போதைப்பொருளாகும். இது மாயத்தோற்றங்கள், திடீர் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும். இத்தகைய போதைப்பொருட்கள் ஒருவரின் இயல்பு நிலையை பாதித்து, விபத்துகளுக்கு வழிவகுக்கும். இப்படியான போதை பொருட்களை பயன்படுத்துபவர்களால், மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.
இதற்கு முன்னர், பெங்களூர், சண்டிகர், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போதைப்பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருந்ததை போன்ற வீடியோக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தற்போது பீகாரிலும் இந்த போதைப்பொருள் பரவியிருப்பதை சமீபத்திய வீடியோக்கள் உறுதி செய்திருக்கின்றன.
ஸோம்பி போதைப்பொருளால் இளைஞர் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து, காவல்துறையும் சுகாதார அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு, அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். போதைப்பொருள் எங்கிருந்து வந்தது எனக் கண்டறிய தீவிர விசாரணை தொடங்கியுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு குறித்து உரிய நேரத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இத்தகைய போதைப்பொருட்கள் பரவுவதைத் தடுக்க ஆரம்பகால விழிப்புணர்வே முக்கியம் என வல்லுநர்கள் கூறினர்.
இந்த மருந்துகள் ஒருவரின் சிந்தனை மற்றும் நடத்தையை விரைவாகப் பாதித்து, சில சமயங்களில் வன்முறை அல்லது தன்னைப் புண்படுத்தும் செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்தனர்.
-
மாறப்போகிறதா இந்திய நேரம்? உஜ்ஜயினி டூ கிரீன்விச்.. மத்திய அரசின் 'மஹாகால்' பிளான் -
"உங்க நாடு சுக்கு நூறாக சிதறும்.." வாயை விட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் மொழியிலேயே ராஜ்நாத் சிங் பதிலடி -
ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்?












Click it and Unblock the Notifications