முற்றும் மின் ஊழியர் போராட்டம்! முழுவதுமாக இருளில் மூழ்கிய புதுச்சேரி! போராட்டத்தில் குதித்த மக்கள்!
புதுச்சேரி : புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று 3வது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் துறை ஊழியர்கள் இன்று நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று 3வது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி விவகாரம்
புதுச்சேரி மாவட்டம் அம்பகரத்தூர், தேனூர், தென்னலக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்களில் இருளில் மூழ்கியதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரைகால் - திருவாரூர் நெடுஞ்சாலையில் அம்பகரத்தூர் என்ற இடத்தில் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் ஊழியர்கள் போராட்டம்
இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் காரணமாக நகர மற்றும் கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் மின் தடை
இந்நிலையில் இன்று காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராம மக்கள் மின்தடை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக பேருந்துகள் நின்றதால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்கள் போராட்டம்
மின்சாரம் வந்தால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் என அறிவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதே போல் கோரிமோடு பகுதிகளிலும் மின்தடை காரணமாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications