புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்.. நகராட்சி அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்சன்
புதுச்சேரி: புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடத்தியவர்களை போலிஸார் கைது செய்துள்ள நிலையில், மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்த கட்டிடங்களுக்கு புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Recommended Video
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அழகு நிலையம், மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்களில் விபசாரம் நடந்து வந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த வாரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் இனியன் மற்றும் போலீசார் நகர பகுதியில் மூன்று மசாஜ் செண்டர்களில் விபசாரம் நடத்தி வந்த உரிமையாளர்கள் 5 பேர் வாடிக்கையாளர்கள் 4 பேர் என 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி நகராட்சி
அதே போல் விபச்சாரத்தில் ஈடுப்படுத்தப்பட்ட 10 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட அழகு நிலையம் மற்றும் மசாஜ் செண்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காவல்துறை சார்பில் புதுச்சேரி நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதிகாரிகள் தகவல்
இதனை தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வருவாய் அதிகாரி சாம்பசிவம் மற்றும் ஊழியர்கள் மறைமலைஅடிகள் சாலை, அண்ணாநகரில் விபசாரம் நடைபெற்ற மசாஜ் செண்டர்களை புதுச்சேரி நகராட்சியின் வணிக உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறி செயல்பட்டதாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்ட கட்டிடங்களில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர், மேலும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குற்றம்
நர்சிங் கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மருதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 17 வயதான நர்சிங் கல்லூரி மாணவி. இவர் சோழத்தரம் அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.

காவல்நிலையம்
அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜி என்பவர் மகன் ரஞ்சித்குமார் என்பவர் இவரிடம் உறவினர் என்று கூறிக்கொண்டு அடிக்கடி பேசியுள்ளார். இதை தவறாக கருதிய ரஞ்சித்குமார் அவரிடம் மூன்று ஆண்டுகளாக விடாப்பிடியாக பேசி ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது மகளை காணவில்லை என்று பெண்ணின் தந்தை மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோ கைது
புகாரின் அடிப்படையில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில் 17 வயது சிறுமியை ரஞ்சித்குமார் அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றதை தொடர்ந்து காவல்துறையினர் ரஞ்சித் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications