Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு உயர் அதிகாரி மீது பாலியல் புகார்.. ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி கால்நடைத்துறையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெறும் நாளில் கால்நடைத்துறையின் இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

புதுச்சேரியில் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க, உள்ளூர் புகார்கள் குழு என்ற தனிப் பிரிவு, அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது..

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அந்தப் பிரிவின் தலைவராக, முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவி டாக்டர் வித்யா ராம்குமார் நியமிக்கப்பட்டார்..

பெண்கள் புகார்

பெண்கள் புகார்

அந்தப் பிரிவு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள், உயரதிகாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளைப் புகார்களாக அளித்தனர்.. அதில், புதுச்சேரி கால்நடைத்துறையின் இணை இயக்குநராகவும், இயக்குநராக கூடுதல் பொறுப்பையும் வகித்த பத்மநாபனின் பாலியல் தொல்லைகள் தாங்க முடியவில்லை என்று அங்கு பணிபுரியும் பெண்கள் எழுத்துபூர்வமாக அளித்தனர்..

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

அதனடிப்படையில், இந்தப் புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பத்மநாபனுக்குக் கடிதம் அனுப்பியது அந்தக் குழு.. ஆனால் அங்கு ஆஜராகாத அவர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தன்னை விசாரிப்பதற்குத் தடை ஆணையை பெற்றார்..

விசாரணை

விசாரணை

இதற்கிடையில், இயக்குநர் பத்மநாபன் தனது துறையில் பணிபுரியும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோக்கள் வெளியான அதையடுத்து, டாக்டர் பத்மநாபனை கால்நடைத்துறை இயக்குநர் பதவியிலிருந்து விடுவிப்பதாகவும், உடனே அவர்மீது வழக்குப் பதிவு செய்து எஸ்..பி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அப்போதைய கவர்னர் கிரண் பேடி உத்தரவிட்டார்.. அதனடிப்படையில் அரசு நிறுவனமான பான்கேர்' துறையின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.. தொடர்ந்து, தனது மீதான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை பத்மநாபன் அணுகினார் ..

அவசர வழக்கு

அவசர வழக்கு

இந்நிலையில் பத்மநாபன் செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.. அவரது மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.. அதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் காணொலி மூலம் இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது..

அதிகாரிகள் கலக்கம்

அதிகாரிகள் கலக்கம்

வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி சரவணன், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்மநாபனை சஸ்பெண்ட் செய்யும்படி புதுச்சேரி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.. அதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 30-ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நாளிலேயே பத்மநாபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. இது அரசு உயரதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+