தொடரும் இலங்கையின் அத்துமீறல்.. வேலைநிறுத்தத்தில் மீனவர்கள்.. கடலுக்கு செல்லாமல் 1,300 படகுகள்!
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களின் படகுகளை அடித்து சேதப்படுத்துவதுடன், வலைகளை அறுப்பதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இருந்தும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் கைது
இதனிடையே, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 27ம் தேதி சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

மீனவர்கள் போராட்டம்
அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும் முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக மீனவர்கள் கைது செய்யப்படுவது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாகையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவ சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுவிக்க வலியுறுத்தல்
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2018 ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை வசமுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

1,300 படகுகள்
இந்த போராட்டம் காரணமாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 800க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications