''Shift time Over'' பாதி வழியில் கிளம்பிச் சென்ற பாகிஸ்தான் பைலட்! கூச்சல்போட்டு கத்திய பயணிகள்!
ரியாத்: பாகிஸ்தான் விமானி ஒருவர், தன்னுடைய வேலை நேரம் முடிவடைந்துவிட்டது என்று, பாகிஸ்தான் வரை வரவேண்டிய விமானத்தை மற்றொரு நாட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
விமானி இப்படி புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விமானி பாதியிலேயே சென்றதால் பயணிகள் கூச்சல் போட்டு கத்த ஆரம்பித்துள்ள பகீர் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனம் சொந்தமாக விமானங்களை இயக்கி வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் (PK-9754 ) சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத் திரும்ப வேண்டும். சில தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதமாகவே புறப்பட்டது.

வானிலை
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. ரியாத்தில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத் நகரை அடைவதற்குள், மோசமான வானிலை என்று அவசர அவசரமாக சவுதி அரேபியாவின் தம்மம் நகரவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. வானிலை மோசமாக இருந்ததால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் தம்மம் விமான நிலையத்திலேயே பாகிஸ்தான் விமானம் நின்றிருந்தது.

விமானி
பின்னர் வானிலை சரியானதும், ஆறு மணி நேரத்துக்குப் பிறகு இஸ்லாமாபாத்துக்கு விமானம் புறப்படும் என நினைத்த பயணிகளுக்கு விமானி அதிர்ச்சியளித்தார். தனது வேலை நேரம் (Flying Hours) நிறைவடைந்துவிட்டதாக கூறி, மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பயணிகள் அதிர்ச்சி
வானிலை காரணமாக ஏற்கனவே பல மணி நேரங்கள் விமானம் தாமதமாகி இருந்தது. தற்போது விமானியும் விமானத்தை இயக்காமல் அங்கிருந்து சென்றது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை இயக்கச் சொல்லி கூச்சல் போட்டனர். விமான நிலைய அதிகாரிகள் வந்து சமாதானத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் விமானத்தை விட்டு இறங்க முடியாது என போராட்டத்தில் குதித்தனர் பயணிகள்.

மாற்று விமானி
விமானத்தில் இருந்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அங்கிருந்த அனைத்து பயணிகளும் தற்காலிகமாக ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் மாற்று விமானி வரும்வரை ஹோட்டலிலேயே தங்கவைக்கப்பட்டனர். மாற்றுவிமானி வந்ததும் விமானம் இயக்கப்பட்டு இஸ்லாமாபாத் வந்தடைந்தது.

விதிமுறை
சர்வதேச விமான இயக்க விதிகளின்படி குறிப்பிட்ட மணி நேரங்கள் ஒரு விமானத்தை இயக்கியபிறகு விமானி கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும். விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கான இந்த விதி கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதைக் காரணமாக காட்டி விமானி பாதியிலேயே சென்றிருக்கிறார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications