Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோடு எங்கே இருக்கு, கிணறு எங்கே இருக்கு! எப்படி விழுந்திருக்கு பாருங்க இந்த கார்! 2 பேர் பரிதாப பலி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில், தருமபுரி அருகே, வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி சாலையிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது மூழ்கியது.

Recommended Video

    ரோடு எங்கே இருக்கு, கிணறு எங்கே இருக்கு! எப்படி விழுந்திருக்கு பாருங்க இந்த கார்! 2 பேர் பரிதாப பலி

    இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர். இது தொடர்பான பரபரப்பூட்டும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா (42). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டம்

    வீராவின் மனைவி உமாலட்சுமி (32), மகள் சுஷ்மிதா (13). 7ம் வகுப்பு மாணவி. உமாலட்சுமி தங்கை வீடு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ளது. அங்கு தனது கணவர் மற்றும் மகளுடன் உமா லட்சுமி சென்றார். அவர்கள் நேற்று மாலை தங்களது, பொலீரோ வகை மினி எஸ்யூவி கார் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.

    லாரி தண்ணீர்

    லாரி தண்ணீர்

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் அந்த கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரி ரோட்டில் தேங்கி நின்ற மழைநீர் மீது ஏறிச் சென்றது. எனவே, லாரி டயரிலிருந்து மழை நீர் நாலாபுறமமும் பாய்ந்தது. அப்போது பின்னால் வந்த கார் கண்ணாடி முழுவதும் தண்ணீர் சிதறியுள்ளது. வைப்பர் போடாத நிலையில், சாலை எது என்பது காருக்குள் இருந்தவர்களுக்கு புரியவில்லை. தண்ணீர் பட்டதும், காரின் வேகத்தையும் வீரா கட்டுப்படுத்தவில்லை. அதே வேகத்தில் இயக்கியுள்ளார்.

    பாதை மாறிய கார்

    பாதை மாறிய கார்

    பாதை மாறிய கார், சாலையோரத்தில் இருந்த செவத்தான் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாய்ந்துள்ளது. அப்போது காரின் கதவு திறந்ததால் உள்ளே இருந்த உமாலட்சுமி மட்டும் நீந்தி மேலே வந்துள்ளார். அந்த பகுதியிலிருந்த மக்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற உதவி மேலே கொண்டு வந்தனர். ஆனால் அதிகமான தண்ணீர் இருந்ததால், காருக்குள் இருந்த மற்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    மீட்கும் பணி

    மீட்கும் பணி

    காரிமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் கால தாமதமாகிவிட்டது. தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், சம்பத்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

     சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    தற்போது இந்த விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சாலை மற்றும் கிணறு இருந்த இடம் பல அடி தூரமாக உள்ளது தெரிய வருகிறது. அப்படி இருந்தும் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது பதற வைப்பதாக இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+