ரோடு எங்கே இருக்கு, கிணறு எங்கே இருக்கு! எப்படி விழுந்திருக்கு பாருங்க இந்த கார்! 2 பேர் பரிதாப பலி
சேலம்: சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில், தருமபுரி அருகே, வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி சாலையிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது மூழ்கியது.
Recommended Video
இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர். இது தொடர்பான பரபரப்பூட்டும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா (42). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சேலம் மாவட்டம்
வீராவின் மனைவி உமாலட்சுமி (32), மகள் சுஷ்மிதா (13). 7ம் வகுப்பு மாணவி. உமாலட்சுமி தங்கை வீடு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ளது. அங்கு தனது கணவர் மற்றும் மகளுடன் உமா லட்சுமி சென்றார். அவர்கள் நேற்று மாலை தங்களது, பொலீரோ வகை மினி எஸ்யூவி கார் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.

லாரி தண்ணீர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் அந்த கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரி ரோட்டில் தேங்கி நின்ற மழைநீர் மீது ஏறிச் சென்றது. எனவே, லாரி டயரிலிருந்து மழை நீர் நாலாபுறமமும் பாய்ந்தது. அப்போது பின்னால் வந்த கார் கண்ணாடி முழுவதும் தண்ணீர் சிதறியுள்ளது. வைப்பர் போடாத நிலையில், சாலை எது என்பது காருக்குள் இருந்தவர்களுக்கு புரியவில்லை. தண்ணீர் பட்டதும், காரின் வேகத்தையும் வீரா கட்டுப்படுத்தவில்லை. அதே வேகத்தில் இயக்கியுள்ளார்.

பாதை மாறிய கார்
பாதை மாறிய கார், சாலையோரத்தில் இருந்த செவத்தான் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாய்ந்துள்ளது. அப்போது காரின் கதவு திறந்ததால் உள்ளே இருந்த உமாலட்சுமி மட்டும் நீந்தி மேலே வந்துள்ளார். அந்த பகுதியிலிருந்த மக்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற உதவி மேலே கொண்டு வந்தனர். ஆனால் அதிகமான தண்ணீர் இருந்ததால், காருக்குள் இருந்த மற்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மீட்கும் பணி
காரிமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் கால தாமதமாகிவிட்டது. தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், சம்பத்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

சிசிடிவி காட்சிகள்
தற்போது இந்த விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சாலை மற்றும் கிணறு இருந்த இடம் பல அடி தூரமாக உள்ளது தெரிய வருகிறது. அப்படி இருந்தும் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது பதற வைப்பதாக இருக்கிறது.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications