என் உடம்பில் உயிர் இருக்கும் வரை தேசத்தின் ஒரு இஞ்ச் நிலத்தைகூட விட்டுதரமாட்டேன்: ராஜ்நாத்சிங்
சேலம்: என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்த தேசத்தின் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட விட்டுத்தரமாட்டோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறினார்.
சேலத்தில் தமிழக பாஜக இளைஞரணி மாநாட்டில் இன்று ராஜ்நாத்சிங் பேசியதாவது:
சீனாவுடனான 9 சுற்று பேச்சுகளுக்குப் பிறகு நமக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்திய நிலத்தை மத்திய அரசு கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. என் உடம்பில் ரத்தமும் உயிரும் இருக்கும் வரை இந்தியாவின் ஒரு இஞ்ச் நிலம் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கப்படமாட்டாது.
எல்லையை ஆக்கிரமிக்க ஒரு நாடு முயற்சித்தால் அத்தனை வழிகளிலும் அதனை எதிர்க்காமல் நாம் சும்மா இருக்கமாட்டோம். இதற்கு என்ன விலையும் கொடுப்போம். சீனாவுடனான 9 சுற்று பேச்சுகளுக்குப் பின்னர் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து பின்வாங்க ஒப்புக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் காங்கிரஸ் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

காங். நல்லவர்களா? கெட்டவர்களா?
தேசத்தின் ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் பேசுகிறது. காங்கிரஸ் நல்லவர்களா? கெட்டவர்களா? என உங்களிடம் கேட்கிறேன். காங்கிரஸ் நல்லவர்களா? கெட்டவர்களா? என மீண்டும் சொல்லுங்கள்

ஒருபோதும் சமரசம் இல்லை
தேசத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு, எல்லை பாதுகாப்பு விஷயங்களில் பாஜக அரசு ஒருபோதும் சமரசம் செய்ததும் இல்லை. இனியும் ஒருபோதும் அத்தகைய சமரசங்களை செய்ய மாட்டோம். அப்படிப்பட்ட மோசமான காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்திருக்கிறது. இந்த கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

ஊழல், தாஜா அரசியல்
காங்கிரஸும் திமுகவும் மக்க்களுக்கு பாரமாக இருக்கின்றவை. சிறுபான்மையினரை தாஜா செய்வதுதான் இந்த கட்சிகளின் கொள்கையாகும். காங்கிரஸும் திமுகவும் ஊழல், தாஜா அரசியலை செய்கின்றன. சமூக சீர்கேடுகளுக்கு இது வழிவகுக்கும். அனைவருக்கும் நீதி என்பதுதான் பாஜகவின் கொள்கை. பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை திமுக-காங்கிரஸை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
|
இரட்டை இலை- தாமரை கூட்டணி
காங்கிரஸ்- திமுக கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இரட்டை இலை- தாமரைக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். இரட்டை இலையும் தாமரையும் தமிழகத்தை வளப்படுத்த முடியும். தமிழகம் மாற்றத்தை நோக்கி நடைபோட தொடங்கி உள்ளது. பாஜக- அதிமுக கூட்டணி மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications