Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களின் அன்பால்நெகிழ்ந்து போன பதக்க நாயகன் மாரியப்பன்.. மேளதாளம் முழங்க சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரான பெரியவடகம்பட்டியில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்தது.

Recommended Video

    மக்களின் அன்பால்நெகிழ்ந்து போன பதக்க நாயகன் மாரியப்பன்.. மேளதாளம் முழங்க சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

    இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி உள்பட 19 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றம் வென்று சாதனை படைத்தார்.

    பதக்க நாயகன் மாரியப்பன்

    பதக்க நாயகன் மாரியப்பன்

    பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம்பிடித்துள்ளார் மாரியப்பன். கடந்த2016 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிவா நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். வெள்ளிப்பதக்கம் வென்ற பின்னர் தமிழ்நாடு வந்த மாரியப்பன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

     உற்சாக வரவேற்பு

    உற்சாக வரவேற்பு

    இதனை தொடர்ந்து இன்று சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவடகம்பட்டிக்கு வந்தார் பதக்க நாயகன் மாரியப்பன். அப்போது காடையாம்பட்டி அருகே கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க பூக்களை தூவி மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தமிழக வீரர் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து கவுரவித்தார்

    ஊர்வலம்

    ஊர்வலம்

    அதனைத் தொடர்ந்து மாரியப்பனை ஊர் மக்கள் தோலில் தூக்கியவாறு ஊர்வலமாக சென்றனர். உயர் அதிகாரிகள் பலரும் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறிய மாரியப்பன் மற்றும் அவரது தாயார் ஊர்மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த மாரியப்பன் கூறியதாவது:-

    பயிற்சி அகாடமி

    பயிற்சி அகாடமி

    ''பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஊர் மக்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பை எப்போதும் மறக்க முடியாது. சேலத்தில் பயிற்சி அகாடமி அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன்'' என்று மாரியப்பன் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+