சேலம் பெண் கொலையில் திருப்பம்.. 5 பேர் திடீர் கைது.. துப்பு துலக்கிய போலீஸ்.. பிடித்தது எப்படி?
சேலம் : சேலம் அருகே ரயில் மேம்பாலத்திற்கு கீழே சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், மூன்று பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் ரயில் மேம்பாலத்தின் கீழே, வயதான பெண் ஒருவர் சடலமாக சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டார். அவரை கொலை செய்தவர்கள், சடலத்தை போர்வையில் சுற்றி, வீசிச்சென்றது தெரிய வந்தது. வயிறு, கை ஆகிய இடங்களில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் இடது கையில், மணிமலர் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.

பெண் யார்?
இந்தப் பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட புலன் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட அந்தப் பெண், தர்மபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி மலர் என்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் கணவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி, ஓய்வு பெற்ற மணி என்பதும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது.

கணவர் மரணம்
கணவர் உயிரிழந்த நிலையில், கணவரின் ஓய்வுக்கால பணப்பலன்கள் மற்றும் பென்ஷன் தொகையை வைத்து, கொலை செய்யப்பட்ட மலர் என்ற அந்தப் பெண், உள்ளூரில் வட்டித் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவன் இல்லாத நிலையில், வட்டிக்கு கடன் வாங்கிய நபர்கள், பணத்தை திருப்பி தராமல் அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சந்தேகம்
அந்த வகையில், சந்தேகத்தின்பேரில், கடத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அந்த பெண்ணிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியதும், அசல் மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததும் தெரியவந்தது. வாங்கிய பணத்தை உடனடியாக கொடுக்குமாறும், இல்லையென்றால் ஊரைக்கூட்டி மானத்தை வாங்கி விடுவேன் என்றும் கோவிந்தராஜை அந்தப் பெண் எச்சரித்ததாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்து, சடலத்தை போர்வையில் போர்த்தி, ராமமூர்த்தி நகர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

கொலை
இந்தக் கொலைக்கு கோவிந்தராஜூவின் சிநேகிதி பிரபாவதி, தாயார் விஜயகுமாரி, அவரது அக்கா புனிதா மற்றும் நண்பர் அன்பானந்த் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோவிந்தராஜ் உள்ளிட்ட ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் ஐந்து பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவிந்தராஜ், அன்பானந்த் ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையிலும், மற்ற மூன்று பெண்கள் சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால், திட்டமிட்டு பெண்ணை கொலை செய்து, சடலத்தை வீசிச் சென்றதும், கொலையாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications