Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் சவுமியா.. மனைவியை அந்த கோலத்தில் பார்த்ததுமே.. குளுக்கோஸ் பாட்டிலை கையிலெடுத்த டாக்டர்! கடவுளே

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் புதுமண தம்பதிகள் செய்த காரியம், ஒட்டுமொத்த மக்களையும் நிலைகுலைய வைத்துவிட்டது.
அம்மாபேட்டை ஸ்ரீவாரி கார்டன் அருகே உள்ளது வாய்க்கால்பட்டறை.. இங்கு வசித்து வருபவர் இனியன்.. 32 வயதாகிறது.. இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

புதுமண தம்பதி: இவரது மனைவி சவுமியா.. 31 வயதாகிறது.. சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சவுமியா.. டாக்டர் இனியனும், சவுமியாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில், புதுமணத்தம்பதி இருவரும் திருவேங்கடத்தில் வசித்து வந்தனர்.

Salem Wife Newly Married Couple

இந்நிலையில், மெடிக்கல் டிரெயினிங் ஒன்றிற்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், சவுமியா வீட்டில் தனியாக இருப்பதால், அவருடன் வீட்டில் துணைக்கு யார் தங்குவது? என்ற பிரச்சனை எழுந்தது.. கடந்த 6-ம்தேதி தம்பதிக்குள் இதுவே மிகபெரிய தகராறாகவும் உருவெடுத்தது.

தகராறு: பிறகு, சவுமியா அன்றைய தினம் இரவு, தன்னுடைய ரூமுக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டார்... மனைவி இரவு நன்றாக தூங்கட்டும் என்று நினைத்த இனியன், இன்னொரு ரூமுக்குள் சென்று தூங்கியிருக்கிறார்.

ஆனால், காலை வெகுநேரமாகியும் ரூம் கதவு திறக்காததால், பதற்றமடைந்த இனியன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார்.. அப்போதுதான் சவுமியா ஃபேனில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிகொண்டிருப்பதை கண்டு அலறினார் இனியன்.. காதல் மனைவி இறந்த அதிர்ச்சியிலிருந்து இனியனால் மீண்டு வரவே முடியவில்லை.. நாள் முழுவதும் அழுதுகொண்டேயிருந்தார்..

கொடுமை: பிறகு அன்றைய தினமே, இனியனும் வெற்று ஊசியை தன்னுடைய உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார்.. ஆனால், குடும்பத்தினர் இனியனை காப்பாற்றிவிட்டனர். இதற்கு பிறகு சேலத்திலுள்ள அவரது வீட்டிற்கு வந்தார் இனியன். மனைவியை மறக்க முடியாமல் தவித்து கொண்டேயிருந்தார். இந்த நிலையில் கடந்த 10-ம்தேதி, தன்னுடைய வீட்டில் 2-வது முறையாக விஷமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்..

ஆனால், அதில் அவர் இறக்கவில்லை.. இதனால் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அறையில் தூங்க சென்றவர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.. இதனால் அவரது அறைக்குள் இனியனின் பெற்றோர் சென்று பார்த்தபோது, இனியன் சடலமாக கிடந்ததை கண்டு கதறி துடித்தனர்.

ரிப்போர்ட்: இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இனியனின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்தபோதுதான், இனியன் குளுக்கோஸ் பாட்டிலில், விஷ ஊசி செலுத்தி, பிறகு அந்த குளுக்கோசை தன்னுடைய உடலில் "டிரிப்ஸ்" மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மனைவி இறந்த சோகத்தில், 3 முறை தற்கொலைக்கு முயன்று, இறுதியில் தன்னுடைய உயிரை விட்டார் இனியன். மகனின் சடலத்தை கண்டு பெற்றோர் பதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. திருமணமான ஆறே மாதத்தில் இந்த காதல் ஜோடியின் தற்கொலையானது சேலத்தை அதிர வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+