ஹாட் கிளைமேட்டில் ஒரு கூல் நியூஸ்... கொளுத்தும் கோடை வெயிலில் தப்பிக்க ஏற்காட்டில் ஐக்கியமான மக்கள்
சேலம்: கோடை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு வெயிலிருந்து விடுபட சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
Recommended Video
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சேர்வராயன் மலையான ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 5,326 அடி உயரத்தில் உள்ள ஏற்காட்டில் கோடையிலும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக் கூடிய இடங்கள் பல அமைந்துள்ளதாலும் சுற்றுலாப் பயணிகளை ஏற்காடு நோக்கி படையெடுக்கின்றனர்.

ஏற்காட்டின் சிறப்பம்சங்கள்
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் விரும்பும் படகு சவாரி, குழந்தைகளும் பெண்களும் விரும்பும் மலர்த்தோட்டம், மலை உச்சியில் இருந்து சேலம் மாநகரை கழுகு பார்வையில் பார்க்கக் கூடிய பக்கோடா பாயின்ட், ஆன்மிகத்தை விரும்புபவர்களுக்கான சேர்வராயன் குகைக் கோயில், ராஜ ராஜேஸ்வரி கோயில், இயற்கை அழகை காண விரும்புப வர்களுக்கு காபி எஸ்டேட் என ஏற்காட்டில் கண்டு ரசிப்பதற்கான இடங்கள் ஏராளமாக உள்ளன.

வெளிமாநில பயணிகள்
கோடை விடுமுறையில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஊட்டி, கொடைக்கானல் போல ஏற்காட்டிலும் ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப் படுவது வழக்கம். ஏற்காட்டில் இந்தாண்டு கோடை விழா நடப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.

கோடை விடுமுறை
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே ஏற்காட்டில் பல நாட்கள் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சேலத்தில் இருந்து பலர் இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு வந்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள் குறைவு
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பது பயணிகளுக்கு அதிருப்தி அளித்து இருக்கிறது. மலைப்பாதைகள் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதோடு, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக சுகாதார வசதிகளை மேம்படுத்துவதோடு, கழிப்பறைகள், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications