ஹாட் கிளைமேட்டில் ஒரு கூல் நியூஸ்... கொளுத்தும் கோடை வெயிலில் தப்பிக்க ஏற்காட்டில் ஐக்கியமான மக்கள்
சேலம்: கோடை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு வெயிலிருந்து விடுபட சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
Recommended Video
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சேர்வராயன் மலையான ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 5,326 அடி உயரத்தில் உள்ள ஏற்காட்டில் கோடையிலும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக் கூடிய இடங்கள் பல அமைந்துள்ளதாலும் சுற்றுலாப் பயணிகளை ஏற்காடு நோக்கி படையெடுக்கின்றனர்.

ஏற்காட்டின் சிறப்பம்சங்கள்
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் விரும்பும் படகு சவாரி, குழந்தைகளும் பெண்களும் விரும்பும் மலர்த்தோட்டம், மலை உச்சியில் இருந்து சேலம் மாநகரை கழுகு பார்வையில் பார்க்கக் கூடிய பக்கோடா பாயின்ட், ஆன்மிகத்தை விரும்புபவர்களுக்கான சேர்வராயன் குகைக் கோயில், ராஜ ராஜேஸ்வரி கோயில், இயற்கை அழகை காண விரும்புப வர்களுக்கு காபி எஸ்டேட் என ஏற்காட்டில் கண்டு ரசிப்பதற்கான இடங்கள் ஏராளமாக உள்ளன.

வெளிமாநில பயணிகள்
கோடை விடுமுறையில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஊட்டி, கொடைக்கானல் போல ஏற்காட்டிலும் ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப் படுவது வழக்கம். ஏற்காட்டில் இந்தாண்டு கோடை விழா நடப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.

கோடை விடுமுறை
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே ஏற்காட்டில் பல நாட்கள் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சேலத்தில் இருந்து பலர் இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு வந்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள் குறைவு
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பது பயணிகளுக்கு அதிருப்தி அளித்து இருக்கிறது. மலைப்பாதைகள் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதோடு, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக சுகாதார வசதிகளை மேம்படுத்துவதோடு, கழிப்பறைகள், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications