15 நாள் தான் தங்கலாம்.. சிங்கப்பூரிலும் விரட்டியடிக்கப்படும் கோத்தபய ராஜபக்சே! அகதியாக மாஜி அதிபர்!
சிங்கப்பூர்: இலங்கையில் மக்கள் போராட்டத்தால் உயிருக்கு பயந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கு வசிக்க 15 நாளுக்கு மேல் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவும் கைவிரித்துள்ளதால் இதனால் அவர் வேறு நாட்டில் தஞ்சமடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. இதனால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து கோத்தபய ராஜபக்சே மறுத்து வந்தார்.

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே
இந்நிலையில் கடந்த 9 ம் தேதி நாடு முழுவதும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் பயந்துபோன அவர் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ராணுவ பாதுகாப்புடன் இருந்தார். அதன்பிறகு புதன்கிழமை அவர் மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்று தஞ்சமடைந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கடிதம் அனுப்பினார். மேலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புகலிடம் கொடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

15 நாட்கள் மட்டுமே அனுமதி
இந்நிலையில் தான் சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவை நீண்டகாலம் தங்கள் நாட்டில் தங்க வைக்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 15 நாட்கள் மட்டுமே கோத்தபய ராஜபக்சே அங்கு தங்க அனுமதி கொடுத்து இருப்பதாக அதிகாரிகள் கோத்தபய ராஜபக்சேவிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛கோத்தபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகலிடம் கோரவில்லை. அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை'' என்றார்.

வேறு நாட்டில் தஞ்சமடையும் சூழல்
முன்னதாக கோத்தபய ராஜபக்சே இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் இலங்கை மக்களுக்கு எதிராக அவருக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா விரும்பவில்லை எனவும், அவரது கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இதனால் கோத்தபய ராஜபக்சே வேறு நாடுகளில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூலை 20ல் அதிபர் தேர்தல்
இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நேற்று பதவியேற்றார். இலங்கையில் ஜூலை 20ல் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று முதல் அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டம் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications