Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனர் மீது தாக்குதல்.. சிங்கப்பூரில் நாம் தமிழர் நிர்வாகிக்கு வாழ்நாள் தடை ஏன்? உண்மை காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. ஏபிபி நாடு ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி குமரேசன் என்பவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அவர் சிங்கப்பூர் செல்ல முடியாது. அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பொதுவாக சிங்கப்பூர் அரசு தமிழர்களுக்கு எதிராக இப்படி நடவடிக்கை எடுக்காது. தமிழர்களை பொதுவாக வரவேற்கும் நாடுதான் சிங்கப்பூர். ஆனால் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தகவல்

தகவல்

நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து இவர் தடை பெற்றதாக தகவல் வெளியானது. சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையிலேயே அக்கட்சி சார்பான பணிகளில் ஈடுபட்டதற்காக குமரேசன் தடை பெற்றதாக தகவல் வெளியானது.

 நாம் தமிழர் நிர்வாகி

நாம் தமிழர் நிர்வாகி

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி உண்மையில் நீக்கப்பட்டது ஏன், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. ஏபிபி நாடு ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டவரின் பெயர் முன்பு ஊடகங்களில் வெளியானது போல குமார் கிடையாது. திருவாரூரை சேர்ந்த குமார் என்ற நாம் தமிழர் நிர்வாகி யாரும் சிங்கப்பூரில் வேலை பார்க்கவில்லை.

சிங்கப்பூர் தடை ஏன்?

சிங்கப்பூர் தடை ஏன்?

மாறாக குமரேசன் என்ற நாம் தமிழர் நிர்வாகி சிங்கப்பூரில் இருந்துள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இவர்தான் சிங்கப்பூரில் நுழைவதற்கு வாழ்நாள் தடை பெற்று இருக்கிறார். சிங்கப்பூரில் நடந்த வாக்கு வாதம் ஒன்றில் தான் வேலை பார்க்கும் இடத்தில் சீனர் ஒருவரை குமரேசன் தாக்கியதாக கூறப்படுகிறது.

 உண்மை காரணம்

உண்மை காரணம்

இது தொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது இவரின் அடையாள அட்டையை சோதனை செய்யும் போது நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டை கிடைத்துள்ளது. இவரின் நாம் தமிழர் கட்சி அடையாள அட்டையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இருந்துள்ளது. இதுதான் சிங்கப்பூர் அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க காரணம். அங்கு தமிழர்களை ஒன்று சேர்க்கும் விதமாக, குழு சேர்க்கும் விதமாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

மோதல்

மோதல்

இந்த நிலையில் இவரின் செயல்பாடுகள், சீனருடனான மோதல் மற்றும் அடையாள அட்டையில் இருந்த பிரபாகரன் புகைப்படம் ஆகிய காரணங்களால் குமரேசன் சிங்கப்பூரில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடைய வங்கிக்கணக்குகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் முடங்கி உள்ளதால் தடை பெற்ற நாம் தமிழர் நிர்வாகி குமரேசனின் தந்தை ஏபிபி நாடு செய்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+