தமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்
சிவகங்கை: தமிழ் நாகரீகத்தின் தாய்மடியாக போற்றப்படும் கீழடிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழாய்வில் தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாடு மற்றும் நாகரீகத்தில் சிறந்து விளங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாட்களில் நிறைவுபெற உள்ள நிலையில், தொல்லியல் ஆர்வலர்களும் பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அகழாய்வு நடைபெறும் இடத்தை பார்க்க ஆர்வமுடன் குவிந்து வருகிறார்கள்.
முன்னதாக அதிக அளவு மக்கள் குவிந்து வரும் காரணத்தால் தொல்லியல் ஆய்வு பாதிக்கப்படுவதாக அங்கு பணியாற்றுபவர்கள் புகார் அளித்தனர்.

22 குழிகளை பார்க்க அனுமதியில்லை
இதன் காரணமாக அகழாய்வு பணியை பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் 32 குழிகளை மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிடலாம். அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட அனுமதியில்லை என கட்டுப்பாடுகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சுற்றுலாத்தளமாகிய கீழடி
இந்த கட்டுப்பாடுகளையும் தாண்டி, விடுமுறை நாளான இன்று ஏரளமான மக்கள் ஆர்வமுடன் தமிழ் நாகரீகத்தின் தாய்மடியாக போற்றப்படும் கீழடிக்கு வருகை தருகிறார்கள். இதனால் சிறந்த சுற்றுலாத்தளமாக உருவெடுத்துள்ளது கீழடி.

கட்டிட கலையில் சிறந்தவர்கள்
வரலாற்று புத்தகங்களில் சிந்து சமவெளி நாகரீகத்தை படித்த மக்கள் இனி வைகை கரை நாகரீகத்தையும் படிக்க போகிறார்கள். தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிட கலையில் சிறந்த விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு அங்குள்ள உள்ள நீண்ட சுவர்கள் உறை கிணறுகள ஆதாரமாக கிடைத்துள்ளது.

நெசவுத்தொழில்
அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு விளையாட்டுகள், விலங்கு வேட்டைகள், அசைவ உணவு பழக்கங்கள் அந்த காலத்தில இருந்ததற்கான ஆதாரங்களக காளை, எருமை, வெள்ளாடு உள்பட பல்வேறு விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளது. மேலும் நெசவுத்தொழிலில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. மேலும் செல்வசெழிப்பிலும், கலை நேர்த்தியிலும் சிறந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மொத்தம் கீழடியில் 110 ஏக்கர் நிலம் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டி உள்ளது
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications