விடுதலைப் புலிகளின் 'ஹிட்' லிஸ்டில் இருந்த மைத்ரிபால சிறிசேன.. ! 2 முறை 'ஜஸ்ட் எஸ்கேப்"!!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் இருந்து 2 முறை உயிர்தப்பியவர் மைத்ரிபால சிறிசேன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் மைத்ரிபால சிறிசேன.
இலங்கையின் 7வது அதிபராகியுள்ளார் மைத்ரிபால சிறிசேன. இவரது முழுப் பெயர் பள்ளேவத்தே கமரால-லாகே மைத்ரிபால யாபா சிறிசேன.

1951ம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த மைத்ரிபால சிறிசேன கம்யூனிச ஆதரவும் சீனா சார்புமான அரசியலைக் கொண்டவராக இருந்தார். இதனால் 1971ஆம் ஆண்டு இலங்கையில் ஆயுதம் தாங்கிய இடதுசாரிகளான ஜே.வி.பி.யினர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் அடிப்படையில் மைத்ரிபால சிறிசேனவும் கைது செய்யப்பட்டார். பின்னர் விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
அதனைத் அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கினாலும் இலங்கை சுதந்திர கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1979ஆம் ஆண்டு அக்கட்சியின் பொலநறுவை மாவட்ட செயலாளரானார்.
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறறயாக எம்.பி.யானார். 1994ஆம் அனடு நீர்ப்பாசனத்துறை அமைச்சரானார். அதன் பின்னர் இலங்கை சுதந்திர கட்சியில் அமைச்சக முடியாத மூத்த தலைவராக உயர்ந்தார்.
2001ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வரை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராகவே இருந்தார். இவரது முயற்சியால்தான் ஜே.வி.பியானது சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்தது.
2007ஆம் ஆண்டு வெலிகந்த என்ற இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். 2008 ஆம் ஆண்டு பண்டாரகம என்ற இடத்திலும் தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்குதலில் இருந்து மைத்ரிபால சிறிசேன உயிர் தப்பினார்.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சகட்டத்தில் இருந்த போது பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் வகித்தவர் மைத்ரிபால என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications