இலங்கையில் பழைய இரும்புக்குப் போடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - அதிர்ச்சித் தகவல்
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் அங்குள்ள இரும்புக் கடைகளுக்கு விற்பனைச் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வு அவ்வப்போது நடந்து வருகிறது. அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் பின்னர் சொந்த ஊர் திரும்பும் போது, இலங்கை அரசால் அவர்களுடைய படகுகள் திருப்பித் தரப்படுவதில்லை.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக தமிழக மீனவர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவ்வாறு கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழைய இரும்புப் பொருட்களை விற்கும் கடைக்கு விற்று விடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சேதமடையும் படகுகள்...
தமிழக மீனவர்களின் படகுகள் யாழ்ப்பாணம், ஊர்காவல்துறை துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் கடும் சேதத்தை சந்திக்கின்றன.
ஏலம்...
இன்னும் சில படகுகள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு சேதமான படகுகள் இரும்பு வியாபாரிகளுக்கு ஏலம் மூலமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
8 லட்ச ரூபாய்க்கு...
சமீபத்தில் இவ்வாறு நடந்த ஏலம் ஒன்றில், ஊர்காவல்துறை துறைமுகத்தில் மூழ்கி கிடக்கும் அத்தனை படகுகளையும் சுமார் 8 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு வியாபாரி ஏலம் எடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சி...
இப்போது இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் தங்களது படகுகள் திரும்பிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் தமிழக மீனவர்களுக்கு இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications