ஆஸ்திரேலியாவில் உச்சத்தில் கொரோனா.. தேசிய அவசரநிலை சூழல்.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தேசிய அவசரநிலை போல் உள்ளதாக தலைவர்கள் கூறியுள்ளனர். மெதுவான தடுப்பூசி பயன்பாட்டுக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரோனா முதல் அலையை சமாளிக்க முடியாமல் பல்வேறு நாடுகள் திணறிக் கொண்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியா அதனை வெற்றிகரமாக கையாண்டது. இதனால்தான் ஆஸ்திரேலியாவில் கொரோனா மொத்த பாதிப்பு அதிகமாக இல்லை.
அனால் கொரோனா இரண்டாவது அலையில் டெல்டா வைரஸ் மாறுபாடு ஆஸ்திரேலியாவை பாடாய்படுத்தி வருகிறது. சிட்னி, கான்பெர்ரா ஆகிய நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

அதிகரிக்கும் பாதிப்பு
சிட்னியில் வேகமாக அதிகரித்து வரும் பாதிப்புகள் தேசிய அவசரநிலை போல் ஆகி விட்டது என்று ஆஸ்திரேலிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் தலைவர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், ' கொரோனாவை ஒரு தேசிய அவசரநிலை என்று அறிவிப்பதன் மூலம் அரசு நெருக்கடியை தவிர்க்க முடியும்.

தடுப்பூசி வேண்டும்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தேசத்தின் சார்பாக எங்களுக்கு ஒரு கடமை உள்ளது.வைரஸ் "எல்லா இடங்களிலும் வேகமாக பரவுகிறது. நாட்டின் 25 மில்லியன் மக்கள் தற்போது ஊரடங்குக்கு கீழே இருக்கின்றனர். என்வே தேசிய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். கான்பெர்ராவிற்கு அதிகமான தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியுள்ளார்.

காரணம் என்ன?
சிட்னியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்குள்ள 5 மில்லியன் மக்களுக்கு அக்டோபர் வரை கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணி மிக மெதுவாக நடப்பதே கொரோனா எழுச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 12 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்ட பிரதமர்
ஃபைசர் ஜாப்கள் வழங்குவதில் உள்ள சிக்கல்கள், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் ஆகியவை தடுப்பூசி போடுவதை மெதுவாக்கி இருக்கின்றன. மெதுவான தடுப்பூசி பயன்பாட்டுக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். நாம் சந்தித்த சவால்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். வெளிப்படையாக செல்வதென்றால் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் உள்ளன, சில விஷயங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications