சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ஆட்சியை காப்பாற்ற முயற்சி.. கொதிக்கும் மாஜி சபா ஆவுடையப்பன்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
நெல்லை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை சட்டப்படி செல்லாது என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, சபாநாயகர் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது தவறானது. சட்ட விதிகளுக்கு முறனானது. 18 எம்எல்ஏக்களும் முதல்வரை மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அதை குற்றச்சாட்டாக கருதி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த கட்சியில், எந்த சின்னத்தில போட்டியிட்டனரோ அதே கட்சியில் தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சபாநாயகர் கட்சி மாறியுள்ளதாக கூறி அறிவித்திருப்பது சட்டத்திற்கும், நியாத்திற்கும் புறம்பானது. இந்த விவகாரத்தில் கொறடா உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் நடந்துள்ளனர் என்று கூற முடியாது.
இது கட்சி தாவலே இல்லை. அப்படி இருக்கையில் கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததில் அர்த்தமே இல்லை. இவ்வாறு செய்வது சட்டப்படி செல்லாது.
கர்நாடகாவில் இதுபோல் நடந்து எம்எல்ஏக்கள் கோர்ட் சென்ற போது இது உட்கட்சி விவகாரம், சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தது தவறு என்று கூறி கைவிரித்தது. இதனால் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
அப்போது அவர்களுக்கு நீதி கிடைக்கும். எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அச்சத்தில் சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாவே கருத வேண்டியது உள்ளது. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ஆட்சியை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications