சென்னை அருகே அடுத்தடுத்து வெடித்த 3 நாட்டு வெடிகுண்டுகள்.... சிவசேனா நிர்வாகிகளுக்கு குறியா?
சென்னை: சென்னை அருகே கானத்தூர் என்ற இடத்தில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் நடைப் பயணமாக வந்த சிவசேனா கட்சியினரைக் குறி வைத்து இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரை அருகே உள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென பலத்த சப்தத்துடன் முதல் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

அடுத்து, கானத்தூர் மீன் மார்க்கெட், கானத்தூர் பொழுது போக்கு மையம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. குண்டுகள் வெடித்ததால் அதிர்வு ஏற்பட்டதை கண்டதும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது போலீஸாரைப் பார்த்து இரண்டு சிறுவர்கள் ஓட முயற்சித்துள்ளனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கானத்தூரில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவிலில் கடந்த மாதம் திருவிழா நடந்தது. அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வாங்கி வெடிக்கப்பட்டன. அதில் மீதம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை குப்பையில் போட்டு அழிக்க முடிவு செய்து உள்ளனர். ஆனால் அதை அழிக்காமல் பதுக்கி வைத்து 3 இடங்களில் தற்போது வெடிக்க செய்து இருப்பதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் சொல்வது உண்மையா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், போலீஸாருக்கு வேறு சந்தேகமும் வந்துள்ளதாம். அதாவது, கச்சத்தீவை மீட்கக்கோரி சிவசேனா கட்சி நிர்வாகிகள் கர்ணன் என்பவரது தலைமையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைப்பயணம் வந்தனர்.
இந்த நேரத்தில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் அவர்களைக் குறி வைத்து திட்டமிடப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications