தமிழக ஓட்டை பேருந்தில் இருந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்த பெண்... 4 பேர் சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லை அருகே அரசுப் பேருந்தின் ஓட்டை வழியே சாலையில் விழுந்து பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் எதிரொலியாக 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் காயன்குளத்தை சார்ந்தவர் ராஜன். இவர் தனது மனைவி சுவாதியோடு 15ம் தேதி இராஜபாளையத்தில் உள்ள உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தென்காசிக்கு வந்துள்ளார். அப்போது கொட்டராக்கரைக்கு தமிழக அரசு பேருந்து ஓன்று வந்துள்ளது. அதில் கணவனும், மனைவியும் ஏறியுள்ளனர்.

பேருந்து புனலூர் கே.எஸ்.ஆர்.டி.சி.பேருந்து நிலையம் அருகே மாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் உள்ளே பின் சக்கரத்தை ஒட்டிய இருக்கைக்கு கீழ் இருந்த பேருந்தின் பிளாட்பாரம் உடைந்து விழுந்தது. இதன் வழியாக சுவாதி பேருந்தில் இருந்து கீழே சாலையில் விழுந்தார்.

இதனைக் கண்டு ராஜனும், மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தத்தைத் தொடர்ந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் பேருந்தை நிறுத்தியுள்ளார். அதிர்ஷ்ட வசமாக பேருந்தின் உள்ளிருந்து சாலையில் விழுந்த சுவாதிக்கு பெரிய காயம் ஏதும் இல்லை. இடது கை தோள்பட்டை மட்டும் சேதமடைந்தது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்து சுவாதியை காப்பாற்றி புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விரைந்து வந்த புனலூர் போலீசார் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுனர் சுப்ரமணியன், நடத்துனர் ஐயப்பன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரி, பணிமனை மேலாளர், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர் மீது ஆய்வாளர் சிவா பிரகாஷ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் பேருந்தின் தரம் குறித்தும் புனலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பேருந்தை முழுமையாக சோதனை செய்துள்ளனர்.

கேரளமாநிலம் புனலூரில் நடந்த விபத்து தொடர்பாக தென்காசி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இரண்டுபேர், விபத்து ஏற்பட்ட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications