பல கோடி அரசு நிலத்தை அபகரித்து ஸ்வாஹா செய்த இணை சார்பதிவாளர்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்து ஸ்வாகா செய்த இணை சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பஸ் நிலையம் அருகே பத்மானபபுரம் நகராட்சிக்கு ஆறு சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலம் சிலரால் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
நெல்லையை சேர்ந்த கோமதி நாயகம், தூத்துக்குடியை சேர்ந்த பிரம்மநாயகம், செய்துங்கநல்லூரை சேர்ந்த ராமலிங்கம், மூலக்கரைபட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இந்த இடம் ஒரு கோயிலுக்கு சொந்தமானது என்று கூறி போலி பத்திரம் தயாரித்துள்ளனர். பின்னர் இந்த நிலத்துக்கான பவர் நாங்குநேரி அருகே கீழமாவடியை சேர்ந்த ஜாண்சன் என்பவருக்கு எழுதி கொடுக்கப்பட்டது.
அவர் கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையை சேர்ந்த ஜெயச்சந்திரசேகர் என்பவருக்கு விற்றுள்ளார். இதற்கு தக்கலை சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார்-பதிவாளராக வேலை பார்த்த மணி என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த விபரங்களை உள்ளடக்கி பத்மனாபபுரம் நகராட்சி ஆணையர் டெல்லிஸ் ராய், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார். இதுபற்றி நிலஅபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இணை சார்பதிவாளர் மணி உட்பட ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலத்தின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications