For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 7 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 7 மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 7 மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமி, திருப்பூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ராஜாமணி திருச்சி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

7 Districts collector transfer in tn

நெல்லை கலெக்டராக பணிபுரிந்து வந்த கருணாகரன், வேளாண் துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி நெல்லை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் நில அளவை இயக்குனராக மாற்றப்பட்டு அவருக்கு பதில் தூத்துகுடி மாவட்ட கலெக்டராக என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகை கலெக்டராக இருந்த எஸ்.பழனிச்சாமி கால்நடைத்துறை துணை செயலராக மாற்றப்பட்டு, சுரேஷ்குமார் நாகைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி, நில நிர்வாகத்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ், பள்ளிக்கல்வித்துறை இணை செயலராக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்த நந்தகுமார், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
Tamilnadu government has ordered 7 Districts collector transfer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X