ஈரோட்டின் 8 வாக்குச்சாவடிகளில் “பெண்கள் ராஜ்ஜியம்”தான்- தேர்தல் ஆணையம் முடிவு
ஈரோடு: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் 8 தொகுதிகளுக்கு ஒரு வாக்குச்சாவடி பெண்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 99 ஆயிரத்து 450 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 92 ஆயிரத்து 438 பேர். பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 6 ஆயிரத்து 923 பேர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 485 பேர் அதிகமாக உள்ளனர்.தேர்தலை யொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 2114 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பெண்களே தேர்தல் நடத்தும் வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குசாவடி என்ற கணக்கில் பெண்களே தேர்தல் நடத்தும் வாக்கு சாவடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் மட்டுமே ஓட்டு போடும் வகையில் அமைக்கப்படும் இந்த வாக்குசாவடிகளில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு இடையன் காட்டு வலசு நடுநிலைப்பள்ளி, ஈரோடு மேற்கு தொகுதியில் சித்தோடு ராயர் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி தொகுதியில் கருந்தேவன் பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகள் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், பெருந்துறை தொகுதியில் பெருந்துறை கிழக்கு பள்ளி, பவானி தொகுதியில் அம்மாப்பேட்டையில் உள்ள பெரியசாமி நடுநிலைப்பள்ளி, அந்தியூர் தொகுதியில் பள்ளி பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, கோபிதொகுதியில் குள்ளம் பாளையம் அரசு தொடக்க பள்ளி, பவானி சாகர் தொகுதியில் வேட சின்னனூர் தொடக்கப் பள்ளி ஆகிய 8 இடங்களில் பெண்களுக்கான வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications