வேடசந்தூர் அருகே வார்டு பிரிப்புக்கு எதிராக பேரூராட்சி அலுவலகத்திலேயே சமைத்து கிராம மக்கள் போராட்டம்
வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தை 3- ஆகப் பிரித்து குக்கிராமங்களில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் இணைத்ததைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
Recommended Video

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தை 3- ஆகப் பிரித்து குக்கிராமங்களில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் இணைத்ததைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அத்துடன் பேரூராட்சி நிர்வாகம் சரியான பதிலை தெரிவிக்காததால் அந்த அலுவலகத்திலேயே சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
வேடசந்தூர் வட்டம் எரியோடு பேரூராட்சிக்குட்பட்டது எ.பண்ணைப்பட்டி. இந்த கிராமம் ஒரு வார்டாக தனிப் பிரதிநிதித்துவத்துடன் இருந்து வருகிறது. அருகே உள்ள கிராமங்களான மணியகாரன்பட்டி, மத்தனம்பட்டி சேர்ந்தவர்கள் வாக்களிக்க கூட எ. பண்ணைப்பட்டிக்கு வந்து சென்றனர்.

எரியோடு பேரூராட்சியின் தலைவர்களாக, துணைத் தலைவர்களாக எ. பண்ணைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பதவியும் வகித்து உள்ளனர். இந்நிலையில் எ. பண்ணைப்பட்டியின் தனி பிரதிநிதித்துவத்தை பறித்து கிராமத்தையே 3 கூறுகளாகப் பிரித்து குக்கிராமங்களான மத்தனம்பட்டி, மணியகாரன்பட்டியில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் எரியோரு பேரூராட்சி இணைத்துவிட்டது. இந்த இணைப்பிலும் கூட பண்ணைப்பட்டிக்கு பிரதிநிதித்துவம் சென்றுவிடக் கூடாது என்கிற வகையில் வீடுகள் எண்ணிக்கை கூறு போடப்பட்டிருக்கிறது என்பது அந்த கிராம மக்களின் குற்றச்சாட்டு.,

இது தொடர்பாக எரியோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுப் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து எ. பண்ணைப்பட்டி கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு எரியோடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அத்துடன் பேரூராட்சி நிர்வாகம் சரியான பதிலை தெரிவிக்காததால் அந்த அலுவலகத்திலேயே சமையல் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் எரியோடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது,
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications