வேடசந்தூர் அருகே வார்டு பிரிப்புக்கு எதிராக பேரூராட்சி அலுவலகத்திலேயே சமைத்து கிராம மக்கள் போராட்டம்
வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தை 3- ஆகப் பிரித்து குக்கிராமங்களில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் இணைத்ததைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
Recommended Video

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தை 3- ஆகப் பிரித்து குக்கிராமங்களில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் இணைத்ததைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அத்துடன் பேரூராட்சி நிர்வாகம் சரியான பதிலை தெரிவிக்காததால் அந்த அலுவலகத்திலேயே சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
வேடசந்தூர் வட்டம் எரியோடு பேரூராட்சிக்குட்பட்டது எ.பண்ணைப்பட்டி. இந்த கிராமம் ஒரு வார்டாக தனிப் பிரதிநிதித்துவத்துடன் இருந்து வருகிறது. அருகே உள்ள கிராமங்களான மணியகாரன்பட்டி, மத்தனம்பட்டி சேர்ந்தவர்கள் வாக்களிக்க கூட எ. பண்ணைப்பட்டிக்கு வந்து சென்றனர்.

எரியோடு பேரூராட்சியின் தலைவர்களாக, துணைத் தலைவர்களாக எ. பண்ணைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பதவியும் வகித்து உள்ளனர். இந்நிலையில் எ. பண்ணைப்பட்டியின் தனி பிரதிநிதித்துவத்தை பறித்து கிராமத்தையே 3 கூறுகளாகப் பிரித்து குக்கிராமங்களான மத்தனம்பட்டி, மணியகாரன்பட்டியில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் எரியோரு பேரூராட்சி இணைத்துவிட்டது. இந்த இணைப்பிலும் கூட பண்ணைப்பட்டிக்கு பிரதிநிதித்துவம் சென்றுவிடக் கூடாது என்கிற வகையில் வீடுகள் எண்ணிக்கை கூறு போடப்பட்டிருக்கிறது என்பது அந்த கிராம மக்களின் குற்றச்சாட்டு.,

இது தொடர்பாக எரியோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுப் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து எ. பண்ணைப்பட்டி கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு எரியோடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அத்துடன் பேரூராட்சி நிர்வாகம் சரியான பதிலை தெரிவிக்காததால் அந்த அலுவலகத்திலேயே சமையல் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் எரியோடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது,
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications