ஃபேஸ்புக்கில் முதல்வர் எடப்பாடியாரை அவதூறாக சித்தரித்த உசிலம்பட்டி இளைஞர் கைது
ஃபேஸ்புக்கில் முதல்வர் எடப்பாடியாரை அவதூறாக சித்தரித்ததாக உசிலம்பட்டி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஃபேஸ்புக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக சித்தரித்த உசிலம்பட்டி இளைஞர் அலெக்ஸ்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தந்திருந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடியார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சமூக வலைதளங்களில் மோடியுடன் முதல்வர் எடப்பாடியார் கை குலுக்கும் படங்களில் மார்பிங் செய்யப்பட்டிருந்தது. அதாவது மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடியார் சட்டைப் பையில் வழக்கமாக இருக்கும் ஜெயலலிதாவின் படத்துக்கு பதில் மோடியின் படம் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசில் கன்னியாகுமரி போலீசார் புகார் கொடுத்தனர். இப்புகாரின் அடிப்படையி உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications