நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதத்துக்கு ரத்து.. கோர்ட் அதிரடி உத்தரவு
மதுபோதையில் காரை ஓட்டியதை நடிகர் ஜெய் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாத காலத்துக்கு ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை: குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய் விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்டதால் அவருக்கு ரூ.5200 அபதாரம் விதித்த நீதிபதி 6 மாதத்துக்கு அவர் கார் ஓட்டமுடியாதபடி அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தார்.
அடையாறு மேம்பாலத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச்சென்றார் நடிகர் ஜெய். அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அவர் பாலத்தின் மீது மோதினார். இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார் ஜெய். குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரை 3-ஆம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அவர் ஆஜராகவில்லை. மேலும் 5-ஆம் தேதியாவது ஆஜராகுமாறு மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு அவர் ஆஜராகாமல் போக்கு காட்டி வந்தார்.
இந்நிலையில் இன்னும் 2 நாள்களில் அவர் ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்யுமாறு காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ஜெய் இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நீதிபதி ஆபிரஹாம் சரமாரியான கேள்விகளை கேட்டார்.
வாழ்க்கையையும் சினிமாபோல் நினைத்தீர்களா என நடிகர் ஜெய்யிடம் நீதிபதி ஆபிரஹாம் காட்டமாக கேட்டார். இதைத் தொடர்ந்து மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்டார் நடிகர் ஜெய்.
இதைத் தொடர்ந்து அவருக்கு ரூ.5200-ஐ அபராதமாக விதித்த நீதிபதி, அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார். இனி 6 மாதங்களுக்கு நடிகர் ஜெய் குடிக்காவிட்டாலும் கூட கார் என்ன பைக் கூட ஓட்ட முடியாது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications