விவசாயிகளின் மரணத்துக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு நடிகர் விஷால் நேரில் ஆதரவு
மரணமடைந்த விவசாயிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் விஷால் கலந்துகொண்டு, விவசாயிகளின் துயர் நீக்க கை கொடுப்போம் என கூறினார்.
சென்னை: தொடர்ந்து நிலவும் வறட்சியின் பாதிப்பால், தற்கொலை செய்துகொண்டும் மாரடைப்பால் மரணமடைந்தும் வருகின்றனர் விவசாயிகள். சென்னையில் விவசாயிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போரட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா தர மறுத்த காரணத்தால் டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகுவதைக் கண்டு பல விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டனர். பலர், நிலங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டு, 3 மாதங்களில் 250 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

மத்திய அரசு, தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு இதுவரை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது, உயிரிழந்த வெறும் 17 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகை அளித்தார்.
தற்போது சென்னையில் விவசாயிகளின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் போரட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் நடிகர் விஷால் கலந்துகொண்டார். அப்போது விவசாயிகளின் துயர் நீக்க கை கொடுப்போம் என கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications