முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகை வரலட்சுமி திடீர் சந்திப்பு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகை வரலட்சுமி இன்று திடீரென சந்தித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகை வரலட்சுமி இன்று திடீரென சந்தித்துள்ளார். அவர் தொடங்கியுள்ள பெண்கள் பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாக தெரிகிறது.
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவும் என அவர் தெரிவித்தார்.
முன்னணி நடிகை ஒருவர் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நடிககை வரலட்சுமி தன்னிடம் முன்னணி டிவி சேனல் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தவறாக பேசியதாக தெரிவித்தார்

வேவ் சக்தி
பின்னர் பெண்களின் பாதுகாப்புக்காக அவர் புது அமைப்பு ஒன்றை கடந்த ஒன்றாம் தேதி தொடங்கினார். வேவ் சக்தி என அந்த பாதுகாப்பு அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது.

முதல்வருடன் சந்திப்பு
இந்நிலையில் வரலட்சுமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நேரில் சந்தித்தார். அப்போது தனது பெண்கள் பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக விளக்கியதாக தெரிகிறது.

பெண்கள் பாதிப்பு
இதைத்தொடர்ந்து வரலக்ஷ்மி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாலியல் பலாத்காரங்களால் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.

6 மாதத்தில் தீர்ப்பு
மாவட்டம் தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தனது கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications