கோடையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர் மோர், தண்ணீர் பந்தல்.. அதிமுக ஏற்பாடு
கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.
சென்னை : கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரவிட்டார்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அதிமுக நிர்வாகிகள், நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னரும் மறக்காமல், சில மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீர் , மோர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
அதன்படி தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைத்து வருகின்றனர். சில பகுதிகளில் திறப்புவிழா நடத்தி செயல்பபடுத்தியும் வருகின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளது.

தர்பூசணி, இளநீர்
அதன்படி அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். சில பகுதிகளில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.

டிடிவி தினகரனின் உத்தரவு
இந்த ஆண்டும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை அதிமுக நிர்வாகிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைவாகவே நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

ஓ.பி.எஸ் அணியின் உத்தரவு
அதே போன்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அதற்கும் அந்த கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications