அதிமுகவில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை.. தினகரனை சந்தித்த விஜிலா சத்யானந்த் எம்பி பேட்டி
அதிமுகவில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று ராஜ்யசபா எம்.பி.விஜிலா சத்யானந்த் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரனை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிவி தினகரன். ஜாமீனில் வெளியே வந்திருக்கும் டிடிவி தினகரனால் மீண்டும் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள தினகரனின் வீட்டுக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சென்று அவரை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இரு அணிகளாக இருந்த அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக உருவாகியுள்ளது.
ஆனால் தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்து விட்டனர். துணை பொது செயலாளரான தம்மை ஒதுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை என கூறியுள்ள தினகரனுக்கு வெளிப்படையாகவே 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பி. விஜிலா சத்யானந்த் இன்று மாலை டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார். தினகரனை அடையாறு இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமியும் தினகரனை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜிலா சத்யானந்த், அதிமுகவில் 3வது அணிக்கு வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். மேலும் நட்பு ரீதியாக தினகரனை தாம் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications