பிறந்ததில் இருந்து ஓராண்டாக ஐசியுவில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்
சென்னை: பிறந்ததில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தை வீராவுக்கு உதவி செய்யுமாறு அவரது தந்தை அன்பு உள்ளங்களிடம் மன்றாடுகிறார்.
சென்னையில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை செய்பவர் யோகேஷ் கன்னா. அவரது மாத வருமானம் ரூ. 28,000. அவர் தனது மனைவி, பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு யோகேஷின் மனைவி கர்ப்பமானார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார்.
24.3 வாரத்தில் முன்கூட்டியே குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு வீரா என்று பெயர் வைத்துள்ளார்கள். பிறந்ததில் இருந்து வாழ்க்கையுடன் போராடுவதால் வீரா என்று பெயர் வைத்துள்ளனர்.
வீராவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் யோகேஷ். ஆனால் குழந்தையை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள அதிக செலவாகும். குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் குறைந்தது 6 மாதமாவது ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் பயன்படுத்த வேண்டும். அந்த மெஷினின் விலை ரூ. 2 லட்சமாகும்.
அதை வாங்க வசதி இல்லாததால் அதை மாதம் ரூ.18 ஆயிரம் வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். 4 மணிநேரத்திற்கு ஒரு முறை வீராவுக்கு சக்ஷன் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நர்ஸ் தேவை. நர்ஸின் மாத சம்பளம் ரூ. 50 ஆயிரம். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க வேண்டும். மருத்துவமனைக்கு அருகிலேயே குடியேறுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் வீட்டு வாடகை மாதம் ரூ.30 ஆயிரம் வருகிறது.
யோகேஷ் வீராவுக்காக இதுவரை ரூ. 53 லட்சம் செலவு செய்துள்ளார். இந்த குழந்தையும் இறந்துவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும் என்று இருக்கிறார் யோகேஷ்.
தன் குழந்தையை காப்பாற்ற தயாள குணம் உள்ள மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சுகிறார் யோகேஷ். வீராவுக்கு உதவ விரும்பும் நல் உள்ளங்கள் கெட்டோ அமைப்பு மூலம் உதவி செய்யலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்
















Click it and Unblock the Notifications