ஜெ. விடுதலைக்காக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை: ரத்தக் கையெழுத்து… தீச்சட்டி, யாகம்!
சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விரைவில் விடுதலை பெறவேண்டி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள், சாதாரண தொண்டர்கள் வரை பலரும் பலவித போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டி ரத்தக் கையெழுத்துப்போட்டு ஆளுநர், குடியரசுத்தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர் அதிமுகவினர்.
இன்று அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் 500 அதிமுக தொண்டர்கள் சைதை இளங்காளியம்மன் கோவிலில் தீச்சட்டி ஏந்தி வழிபாடு மேற்கொண்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி அதிமுகவினர் ஒருபுறம் போராட்டமும், மறுபுறம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரத்தக் கையெழுத்து இயக்கம்
ஜெயலலிதாவின் விடுதலையை வலியுறுத்தி மேற்கு மாம்பலத்தில் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் தலைமையில் அதிமுகவினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். 2500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தங்கள் ரத்தத்தினால் கையெழுத்துப்போட்டு குடியரசுத்தலைவருக்கும்,ஆளுநருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.
பிள்ளையாருக்கு யாகம்
கழக இலக்கிய அணி சார்பில் அரசினர் தோட்டத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 108 யாகப் பொருட்களை அக்னியில் போட்டு வேத விற்பன்னர்கள் யாக வேள்வியை நடத்தினார்கள். இதில் அமைச்சர் பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளர் முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
500 தொண்டர்கள் தீச்சட்டி
இன்று அதிகாலை 4 மணியளவில் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் அமைச்சர் பா.வளர்மதி தீச்சட்டி ஏந்தினார். அவருடன் 500 தொண்டர்களும் தீச்சட்டி எடுத்து கோவிலை வலம் வந்தனர்.
ஜெ.பேரில் அர்ச்சனை
பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்து உடனடியாக விடுதலை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் மேயர் சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர் விருகை ரவி, கவுன்சிலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
108 குத்துவிளக்கு பூஜை
அதை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார்கள்.
1008 கலச பூஜை
மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் 1008 கலசபூஜையும், யாக வேள்வியும் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு 1008 கலசங்களில் இருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் பா.வளர்மதி, டி.கே.எம்.சின்னையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications