கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதி போட்டி.. ஏராளமானோர் பங்கேற்பு
அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதி போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Recommended Video

கோவை: கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை சுங்கவரி துறை அணியும் பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றன.
கடந்த 26-ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை சுங்கவரி துறை அணியை எதிர்த்து டெல்லி இந்தியன் ரயில்வே அணியுடன் விளையாடியது.

இதில் சென்னை சுங்கவரி துறை அணி 69-63 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த டெல்லி இந்தியன் ரயில்வே அணிக்கு 50,000 ரூபாயும் டாக்டர் மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது.
அதேபோல, பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி 59-43 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற கேரள மின்வாரிய அணிக்கு முதல் பரிசாக 50,000 ரூபாய் மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த நம்பிக்கைக்கான விளையாட்டு வீராங்கணை விருது தமிழ்நாடு ஜூனியர்ஸ் வீராங்கணை எஸ்.கிருத்திகாவிற்கு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் துணை ஆனையர் தர்மராஜன் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கூடைபந்து கழக தலைவரும் சி.ஆர்.ஐ குழுமங்களின் இணை நிர்வாக இயக்குனருமான செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications