மக்கள் விரோத ஆட்சி இனியும் நீடிக்கக்கூடாது - ஜெ.,சமாதியில் தீபாவின் நள்ளிரவு சபதம்
தீபாவும், மாதவனும் இணைந்து நள்ளிரவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு சபதம் செய்துள்ளனர்.
சென்னை: இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று நள்ளிரவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து சபதம் செய்துள்ளார் தீபா.
பிரிந்து இருந்த தீபாவும் மாதவனும் நேற்று ஒன்றாக இணைந்தனர். அதே உற்சாகத்தோடு தொண்டர்களிடமும் பேசி அவர்களையும் உற்சாகப்படுத்தினர்.
இரவு 12.20 மணியளவில் இருவரும் கூட்டாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். அங்கு மலர் செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.

என் லட்சியம்
அதிமுகவிற்கு வலிமையான தலைவர்கள் இல்லாததால், பாஜக இயக்குவதாக தோற்றம் உருவாகியுள்ளது. அதிமுகவை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

மக்களுக்காக அரசியல்
பல்வேறு சூழ்ச்சி வளைகள் மத்தியில் நாங்கள் இருவரும் இணைந்துள்ளோம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும்.

நீட் தேர்வு
நீட் விவகாரத்தில் ஒரு மாணவியை இழந்தும் இன்னும் அதில் இருந்து விலக்கு பெற்று தர தமிழக அரசுக்கு திராணி இல்லை. நீட் தேர்வை திணிக்கக்கூடாது என்றும் தீபா கூறினார்.

மக்கள் விரோத ஆட்சி
மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி பெரும்பான்மையை இழந்த ஆட்சியாக உள்ளது. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும் பட்சத்தில் அது நேர்மையாக நடக்குமா என்பது சந்தேகம்தான்.

மக்கள் ஆதரிப்பார்கள்.
தினகரன் தி.மு.கவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. எனவே தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் பொது மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்றும் கூறினார் தீபா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications