மீனவர்களுக்கு என தனி அமைச்சகம்.. நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி லோக் சபாவில் பேசினார்.
அப்போது தமிழகத்தில் ஓகி புயலால் இதுவரை 257 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அவர் கூறினார். ஆனால் தமிழக அரசிடம் அதுகுறித்த எந்த தகவலும் இல்லை என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார்.

விரிவாக்கம் செய்யவில்லை
மீனவர்களை தேடும் பணியை உடனடியாக தொடங்காததும் நாட்டிக்கல் மைலை உடனடியாக விரிவாக்கம் செய்யாததுமே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தனி அமைச்சகம்...
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நடக்காமல் இருக்க மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

இதுவரை நிறைவேற்றவில்லை
மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படும் என 2014 தேர்தலின் போது பாஜக உறுதியளித்தது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
மேலும் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் நடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications