அரசு கேபிள் டிவி மூலம் அரசுக்கு ரூ.180.91 கோடி வருமானம்- சட்டசபையில் தகவல்
சென்னை: அரசுக்கு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் 2014-15 ம் ஆண்டு 181.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் எம்எஸ்ஓ உரிமம் பெற மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டதும், தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி சேவைகளை இந்நிறுவனம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மானிய கோரிக்கை விவாதம்
தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்த துறையின் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், 2011-ம் ஆண்டில் 4 லட்சத்து 94 ஆயிரம் என்றிருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஆகஸ்டு வரை 70 லட்சத்து 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றார்.

அதிகரித்த வருவாய்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இணைப்பு பெற்றுள்ள ஆபரேட்டர்களின் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. 2014-15 ம் ஆண்டு அரசுக்கு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் 181.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இணையக் கல்வி
தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் புதிய தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்படும். அந்த வகையில், தமிழ்மொழி தொழில்நுட்பம் சார்ந்த, பல்வேறு மொழி ஆய்வு மென்பொருள்கள்; உலகெங்கும் வாழும் தமிழர்க்கு பயனளிக்கும் வகையில், உலக தரத்திலான மதிப்பீட்டுக் கருவிகள்; முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மேலாண்மைத் தளம் அமைக்கப்படும்.

தமிழ் கற்க ஆப்ஸ்
அரிய தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், ஓவியங்கள் ஆகியவற்றின் மின்னுருவாக்கம்; தமிழ் மொழியியல் தரவகம் (டேட்டா) மற்றும் மின் அகராதி; கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் திறன்பேசியில் (டாப்லட்) ஆகியவற்றில் தமிழ் பாடங்கள், இலக்கணம் மற்றும் அகராதி ஆகியவற்றை கற்பிப்பதற்கான குறுஞ்செயலிகளை (ஆப்ஸ்) உருவாக்கிச் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications