பிறந்து 10 நாளே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி.. ராமநாதபுரத்தில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிறந்து 10 நாளே ஆன ஆண் குழந்தையை விற்க நடந்த முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ஆதார் என்ற தனியார் குழந்தைகள் இல்லத்தில் பிறந்து 10 நாள் ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து ஆள் கடத்தல் பிரிவு காவல்துறை அதிகாரி நாகசாந்தி விரைந்து வந்து விசாரணையில் இறங்கினார். விற்க முயற்சிக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை மீட்கப்ப்டது. இது யாருடைய ஆண் குழந்தை என்று விசாரணை நடந்து வருகிறது.
இதுபோன்று ஏற்கனவே இக்காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனவா என்றும் விசாரணை நடந்து வருகிறது. காப்பாக உரிமையாளர் பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications