உடலைக் கெடுக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள்... விழிப்புணர்வு ஏற்படுத்திய மனிதச் சங்கிலி
நெல்லை: நெல்லை அருகே பாவூர் சத்திரத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் 2ஆயிரம் மாணவ,மாணவிகள்,கலந்துக் கொண்ட மனித சங்கிலியை நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைவர் கருணாகரன் தொடங்கிவைத்தார்.
விளை நிலங்களையும், உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள், போன்றவைகள் உற்பத்தி செய்வதை தடுக்கும் வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகள் நிரம்பிய வாகனங்களை சோதனையிட, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
காய்கறி, பழங்களின் சாம்பிள் பெறும் சிறப்பு குழு, அதே இடத்தில் விஞ்ஞான ரீதியில் சோதனையிடும். பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயனம் பயன்படுத்தவில்லை என உறுதியானால் மட்டுமே, அந்த வாகனங்கள் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

தர நிர்ணய சான்று...
தர நிர்ணய சான்று தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. கேரள அரசு விதித்த தடை அமலுக்கு வந்தது.

சோதனை குழு...
இந்நிலையில் தமிழக -கேரளா எல்லையோர மாவட்டமான நெல்லை மாவட்டம் ஆரியங்காவு சோதனை சாவடியருகே தனியாக காய்கறிகளை சோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழு ஒன்று இன்றுமுதல் செயல் படத் தொடங்கியுள்ளது.

அனுமதி...
தினமும் இரவு 7மணிமுதல் காலை 6மணிவரை இந்த குழுவினர் கேரளாவுக்கு வரும் காய்கறிகளை சோதனை செய்த பின்பே அம்மாநிலத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

காய்கறி உற்பத்தி...
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம்,கீழப்பாவூர்,சுரண்டை,சாம்பவர் வடகரை, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் எராளமான விவசாயிகள் முழுக்க முழுக்க காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

மனித சங்கிலி...
இன்று தமிழக அரசின் உத்திரவுப்படி வேளாண்மை துறை,தோட்டக்கலை துறை,வேளாண்மை உற்பத்தி பிரிவு சார்பில் பாவூர் சத்திரத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள், குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

விவசாயிகள்...
2 ஆயிரம் மாணவ,மாணவிகள்,கலந்துக் கொண்ட மனித சங்கிலியை நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைவர் கருணாகரன் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான அதிகாரிகள்,விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications