சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புரளி கிளப்பியவருக்கு வலை வீச்சு
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 8 மணியளவில் சென்னை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் ஒன்று தமிழில் வந்துள்ளது. அதில் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் நபர்களை 42 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இரவுக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிறுத்தம் உஷார் படுத்தப்பட்டன. மேலும், இந்த 3 இடங்களையும் போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்த 3 முக்கிய இடங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் சிக்கவில்லை. இதனால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எஸ்எம்எஸ் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, யார் இந்த புரளி எஸ்எம்எஸ்சை அனுப்பியது என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications