சென்னை: கனமழையில் 11 மாடி கட்டிடம் இடிந்து புதையுண்டது - 11 பேர் பலி- 40 பேர் கதி என்ன?
சென்னை: சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் ஒன்றுக் கட்டப்பட்டு வருகிறது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் திடீர் கனமழை பெய்தது. அதில், அந்த கட்டிடம் அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த இடிபாடுகளில், அங்கு கட்டடப் பணிக்காகத் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டோர் சிக்கியியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 பேர் பலி:
கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது.
தேசிய பேரிடர் மீட்புக் குழு:
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் இணைந்துள்ளது. மோப்ப நாய்காளின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இடிவிழுந்ததா?
கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடி தாக்கியே விபத்து நிகழ்ந்ததாக கட்டிடத்தை கட்டிவரும் கட்டுமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த பகுதியைச் சுற்றிலும் 5 மாடிகளைத் தவிர வேறு எந்த கட்டிடமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதான் முதன்முறையாக 11 மாடி கட்டிடம் ஆகும்.
முதல்வர் வேதனை- உத்தரவு:
இந்த துயர சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேதனை தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் மீட்புப் பணியில் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள்- கமிஷனர்:
சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். உதவி எண்கள் இடிபாடுகளில் சிக்கியவர்கள் பற்றிய நிலைமை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை எண்: 044- 40012345
4 பேர் கைது:
இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து ஆகியோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications