பஸ் கட்டண உயர்வால் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம் - படியில் ஆபத்தான பயணம்
பஸ்களில் கட்டணம் இரு மடங்காக அதிகரித்துள்ளதால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
சென்னை: பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்யும் பலரும் மின்சார ரயில்களையே நாடியதால் வழக்கமான கூட்டத்தை விட புறநகர் ரயில்களில் அலைமோதியது. கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில், மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

பேருந்து கட்டணத்தை அதிக அளவு உயர்த்தியதால் உயிரை பணயம் வைத்து ரயில்களில் பயணம் செய்வதாக அவர்கள் வேதனையுடன் பயணிகள் தெரிவித்தனர். ஷேர் ஆட்டோக்களிலும் கட்டணம் அதிகரித்து விட்டதாக பயணிகள் தெரிவித்தனர். பல பகுதிகளுக்கு நடந்தே செல்வதாகவும் கூறியுள்ளனர்.
அரியலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் ,சென்னை, சேலம் மற்றும் பெங்களூர் செல்லும் பயணிகள், ரயில் நிலையத்திங்களில் அலைமோத தொடங்கினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், காலை முதலே டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் போன்றவற்றில் அதிகளவில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால், ஏராளமான பயணிகள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
மதுரையில் இருந்து திருச்சி வரை செல்லும் பாசஞ்சர் ரயில்களிலும், மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயிலிலும், ஈரோடு, திருப்பூர், கோவை செல்லும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
பாண்டிச்சேரியிலும் தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டதால் காரைக்காலில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம் மற்றும் பெங்களுர் செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. படிகளில் தொங்கியபடி ஆண்களும் பெண்களும் பயணித்தனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications